"உலகத் தமிழர்களுக்காக தமிழகத்தில் ஒரு தலைமை வங்கி வேண்டும்" - கவிஞர் வைரமுத்து

0 4485

உலகத் தமிழர்களுக்காக ஒரு தலைமை வங்கி தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் வைரமுத்து பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய தலைமுறை இணைய வழியில் புத்தகங்கங்களை அதிகம் வாசிக்கின்றனர் என்றும் காகிதத்தில் வாசிக்கும் பழக்கத்தினை மாணவர்கள் புதுப்பித்து கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments